Connect with us

பர்சனல் பைனான்ஸ்

முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்!

Published

on

ஏடிஎம், டெபிட், கிரெட்டி கார்டு பரிவத்தனைகளை மேலும் பாதுகாப்பாகச் செயல்படுத்து, 2020 அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.

எனவே, இன்று முதல் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விதிமுறைகளைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) இனி புதிதாக விநியோகிக்கப்படும் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்திய ஏடிஎம் மையங்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2) ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட வங்கியில் கோரிக்கைகள் வைக்க வேண்டும்.

3) ஏற்கனவே ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பெற்றுப் பயன்படுத்தி வருபவர்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைச் செய்யலாமா என்பதற்கான ரிஸ்க் பொருத்து அவர்களே முடிவு செய்யலாம். வெளிநாட்டுப் பரிவத்தனைகளுக்கான அனுமதி தேவையில்லை என்றால் அனுமதி தொடரலாம். இல்லை என்றால் வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்கான அனுமதியை நிறுத்திக்கொள்ளலாம்.

4) இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளின், ஆன்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை நீக்க வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

5) புதிய விதிமுறைகளின் படி ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு மூலம் அதிகபட்சம் எவ்வளவு பெரிய பரிவர்த்தனைகளை வரை செய்யலாம் என்ற வரம்பை, வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம்.

6) வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் இது போன்று வரம்புகளை மாற்றி அமைக்க வங்கிகள் சேவை வழங்க வேண்டும்.

7) ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளில் தற்போது வரும் காண்டெக்ட் லஸ் வசதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

8) டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பரிவத்தனை வரம்பை மாற்றி அமைக்க புதிய வசதியை உருவாக்கித் தர வேண்டும்.

9) புதிய விதிமுறைகள் ஏடிஎம், டெபிட், கிரேடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்து. ப்ரீபெய்டு கிப்ட் கார்டுகளுக்கு பொருந்தாது.

10) “இந்த வழிமுறைகள் கொடுப்பனவு மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 (2007 இன் சட்டம் 51) இன் பிரிவு 10 (2) இன் கீழ் வழங்கப்படுகின்றன” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் அமலுக்கு வருவதன் மூலம், சைபர் குற்றங்கள் குறையும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?