இந்தியா
பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் சற்று முன் திடீரென அவர் காலமானார். அவருக்கு வயது 100.
தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயாரின் புகைப்படத்தை பகிர்ந்து ’ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டின் ஆத்மா கடவுளின் காலடியில் உள்ளது என்றும் தன்னலமற்று கர்மயோகி மற்றும் வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும் தத்துவத்தை நான் எப்போதும் உன்னுள் பார்க்கின்றேன் என்றும் அவருக்கு எனது இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை பிறந்த நாளில் தனது தாயாரை சந்தித்ததை நினைவு வந்த பிரதமர் மோடி, தனது தாயாரின் நூறாவது பிறந்த நாளில் நான் அவரை சந்தித்தபோது அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கூறினார். அது இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள். புத்திசாலித்தனமான வேலை மற்றும் தூய்மையான வாழ்க்கையை நம்மை மெருகேற்றும் என்று கூறினார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவை அடுத்து இந்திய அரசியல்வாதிகள் மட்டுமன்றி உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम… मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022