Connect with us

இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Published

on

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் சற்று முன் திடீரென அவர் காலமானார். அவருக்கு வயது 100.

தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயாரின் புகைப்படத்தை பகிர்ந்து ’ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டின் ஆத்மா கடவுளின் காலடியில் உள்ளது என்றும் தன்னலமற்று கர்மயோகி மற்றும் வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும் தத்துவத்தை நான் எப்போதும் உன்னுள் பார்க்கின்றேன் என்றும் அவருக்கு எனது இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை பிறந்த நாளில் தனது தாயாரை சந்தித்ததை நினைவு வந்த பிரதமர் மோடி, தனது தாயாரின் நூறாவது பிறந்த நாளில் நான் அவரை சந்தித்தபோது அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கூறினார். அது இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள். புத்திசாலித்தனமான வேலை மற்றும் தூய்மையான வாழ்க்கையை நம்மை மெருகேற்றும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவை அடுத்து இந்திய அரசியல்வாதிகள் மட்டுமன்றி உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?