Connect with us

இந்தியா

லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூ. 1 லட்சம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய நிறுவனம்!

Published

on

லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சம்பந்தமான எஸ்எம்எஸ் மற்றும் உரையாடல்கள் நடைபெறும் என்பதும் இது ஊழியர்களின் விடுமுறையை கெடுத்து விடும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் பல தனியார் நிறுவனங்களில் லீவு எடுத்தால் கூட தொடர்ச்சியாக அலுவலகம் சம்பந்தமான பணிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலசமயம் அவசர வேலையாக விடுமுறையில் இருப்பவர் நேரில் வரவழைக்கும் நிகழ்வு கூட நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதியை அமல்படுத்தி உள்ளது. இந்த விதியின்படி ஊழியர்கள் 5 நாள் முதல் 10 நாள்கள் வரை விடுமுறை எடுத்தால் கூட அவர்களுடைய விடுமுறையை கெடுக்கும் விதமாக அலுவலகத்திலிருந்து எந்தவிதமான தொடர்பும் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையின்போது ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக மன நிம்மதியுடன் இருப்பதை உறுதி செய்யவே இந்த விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறையில் இருக்கும் ஊழியர்களின் மனநிலை பாதிக்க கூடிய வகையில் எந்த விஷயங்களையும் நிறுவனம் செய்யக்கூடாது என்பதே இந்த விதியின் நோக்கமாகவும் அதையும் மீறி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை வேலை சம்பந்தமாக தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ளும் பணியாளருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ட்ரீம் 11 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விதி தற்போது ட்ரீம் லெவன் நிறுவனத்தின் ’ட்ரீம் 11 அன்பிளக்’ என்ற பெயருடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் ஒருசில நிறுவனங்களில் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?