இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

- ஜப்பானிய விஞ்ஞானிகள் தீப்பெட்டி அளவிலான ஒரு சிறிய மின்னாக்கியை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை மட்டும் பயன்படுத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்!
- பெங்களுரு டூ மங்களுரு வந்தே பாரத் ரயில் சேவை ஜீன் மாதம் தொடங்க உள்ளது. அதற்க முக்னோட்டமாக ரத்லேஷ்புர் முதல் சுப்பிரமண்யா வரையிலான கடினமான மலைப்பதையில் சோதனை ஓட்டம் தொடங்கியது.
- உத்தராகாண்ட் குஜராத்தை அடுத்து பொது சிவில் சட்டம் அசாமில் நிறைவேற்றம். 2வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை.
- மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 2.5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகளில் வகுப்பு வாரியாக கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டு. மாணவர்களுக்க வழங்கும் விண்ணப்ப்ப் படிவத்திலும் கல்வி கட்டணம் எவ்வளவு என அச்சடித்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
- அகஸ்தியர் மலையில் நீடிக்கும் ஆக்கிரமிப்புகளை பல உத்தரவுகள் ஆணைகளுக்குப் பறகும் அகற்றப்படாத்தற்கு தற்போத பணியில் இருக்கம் மற்றம் ஓய்வு பெற்ற 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்குமுறை மற்றும் சட்டபுர்வமான நடவடிக்கைகளை கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகள் தொடங்க வேண்டும். – உச்சநீதிமன்றம் உத்தரவு.
- விரைவில் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டு பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. – மத்திய அரசு திட்டவட்டம்.
- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தமிழ்நாடு மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சியை நாளை மறுநாள் தொடங்கவுள்ளதாக தகவல்.
- முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்.













