இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

- ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் டீசல் ரயில்களுக்கு மாற்றாக நீரையும் நீராவியையும் மட்டுமே கழிவாக வெளியேற்றும்.
- இஸ்ரோ நிறுவனத்திலிருந்து கடந்த 6 மாதங்களில் 120 முதுநிலை விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளனர் என தகவல்.
- டெல்லியில் கரப்பான் புச்சி ஜனதா கட்சியினரின் நீட் தேர்வு முறைகுடுகளுக்கு எதிரான பொராட்டத்தில் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்த வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது டெல்லி காவல்துறை.
- சென்னை சென்ட்ரல் – பெங்களுரு பையப்பனஹள்ளி இடையேயான 306.2 கிமீ புல்லட் ரயில் திட்ட முன் கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்புக்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது. இப்பணிகள் 2035க்குள் முடிக்கத் திட்டம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் ஆகிறது.
- வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே குடியுரிமையை இழந்ததாக அர்த்தம் இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து. குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
- கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே, காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.












