இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

- நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு.
- 26 நாள்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தனது கோரிக்கைகள் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இருப்பினும் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அபிஜித் குப்தே அறிவிப்ப.
- பத்திரப் பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டம் ஆகஸ்ட் 17 மதல் தொடங்கப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
- சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே 68 கி.மீ. தொலைவுக்கு 5 மற்றம் 6 வது ரயில் பாதைகள் அமைக்க இறுதிகட்ட சர்வே பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்.
- அமெரிக்கா–ஈரான் பதற்றம் காரணமாக மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் தாக்கத்தில், 26,000 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முடிவெடுக்க நாளை நண்பகல் வரை ஒன்றிய அரசு அவகாசம் கேட்டள்ளதாக கரப்பான் புச்சி ஜனதா கட்சி தகவல். தற்கொலை செய்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டக்கார்ர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமை ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்றது.
- டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மையப் போக்குவரத்து முனையமான புதுடெல்லி மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.












