ஆரோக்கியம்
முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?
நாமெல்லாம் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே டாக்கடரிடம் செல்கிறோம் இல்லையா? அவர் என்ன முறை சிகிச்சை தருகிறார் தெரியுமா? அவர் நமக்கு தருவது அல்லோபதி சிகிச்சை. அதாவது ஆங்கில மருந்துகள் கொண்டு அவர் நமக்கு சிகிச்சை அளிக்கிறார். இதைத் தவிர சித்த மருத்துவம் ஓமியோபதி யுனானி என்ற பலவகை மருத்தவங்கள் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன.
எதிர்காலத்தில் மிக பரிச்சயமாக நமக்கு சிகிச்சை அளிக்க இருப்பது முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
முழுமையான மருத்துவம் என்பது உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஆரோக்கியத்தை ஆராயும் முழுமையான முறையாகும். இது வாழ்க்கை முறைகள் மற்றும் பாரம்பரிய அல்லது கூடுதல் சிகிச்சைகளை இணைத்து சமநிலை மற்றும் உடல் நலனை மேம்படுத்தும்.
சிகிச்சை நோயாளி மற்றும் சிகிச்சையாளருக்கு இடையிலான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கிறது. சிகிச்சையின் நோக்கம் காரணங்களை மட்டும் தீர்க்கும்படி இருக்க வேண்டும், அறிகுறிகளை மட்டுமே அல்ல.
சம்பிரதாயமிக்க மருத்துவ சிகிச்சைகள் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பழக்க மாற்றங்கள் உடற்பயிற்சி மற்றும் இயக்க சிகிச்சைகள் மன அழுத்தம் குறைக்கும் பழக்கவழக்கங்கள் (தியானம், மனச்சித்திரம்) அக்குபங்க்சர், கைரோகிய பராமரிப்பு, ஆஸ்டியோபதி மூலிகை மருத்துவம், ஹோமியோபதி, நேச்சுரோபதி மசாஜ், ரீகி, யோகா மற்றும் பிற கூடுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான மருத்துவத்திற்கு பதிலாக பயன்படுத்தப் படுகிறது. சம்பிரதாயமான சிகிச்சையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதலான சிகிச்சைகளை ஒருங்கிணைக்கிறது
இது தற்போது பரவலாக அறியப்படும் பாலி கிளினிக் போன்றதுதான். ஆனால் பாலி கிளினிக்கில் ஆங்கில முறை மருத்துவம் மூலமாகவே பல்வேறு சிறப்பு சிகிச்ச்சைகள் அளிக்கப்படும்.
ஆனால் இந்த புதிய முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) ல் மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்த ஒரு நோயாளியானவர் அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான சிகிச்சை முறைகளை பெறுவதில் அவருக்கு பல்வேறு விருப்பத் தேர்வுகள் வழங்கப்படவிருக்கின்றன. அவர் ஆங்கில மருத்துவத்திலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி யோகா மருத்துவம் மற்றும் அக்குபங்சர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கக்கூடும்.
இத்தைகய புதிய மருத்துவ சிகிச்சை மறைகளைக் கொண்ட முழுமையான மருத்துவம் கொண்ட மருத்துவமனையாக இனி வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகள் மீள் உருவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் ஏற்பLம் இந்த மாற்றங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பரவலாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் இந்த புதிய மாற்றத்தை வரவேற்க தயாராக இருப்போமா?












