இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

- பெண்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை உருவாக்க அரசுக்கு உத்திரவிடக்கோரி வழக்கு. மாதமவிடாய் விடுப்பு குறித்து தொழிலாளர் நலத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை.
- டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிய மனுவை வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை விருப்பமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்தார்.
- இந்தியாவில் முதல்முறையாக “க்யுடெங்கா“ டெங்கு தடுப்புசிக்கு பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60 வயதுடையவர்கள் 2 டோஸ்களாக போட்டுக் கொள்ளலாம். ஆய்வுகளின்படி இந்த தடுப்புசி 7 ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.
- பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது குறித்து தமிழ்நாட்டிடமிருந்து எந்த கடிதமும் வரப்பெறவில்லை என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஒன்றிய அரசின் மொத்தக் கடன்சுமை 2025-26ம் நிதியாண்டில் 8% உயர்ந்து ரூ.201.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ஆண்டிற்கு ரூ.12.43 லட்சம் கோடி வட்டி செலுத்தப்படுவதாகவும் மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
- டெல்லியில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த அனுப்பி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ’முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,’ பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றியது தவெக அரசு.













