இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

- இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஆர்பிஐ பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்கப்பட்டு காகித நோட்டுகளுடன் புழக்கத்தில் விடப்படும்.
- கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் வழக்கு செலவுகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கபில் சிபல்!
- இரயில்களைப் போலவே அரசு பேருந்தகளிலும் செல்போன் பயன்பாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இயர்போன் பயன்படுத்த வேண்டும். ஸ்பீக்கர் போன் சத்தமாக வீடியோ பார்ப்பதைத் தவிர்க்க பயணிகளுக்கு அறிவுறுத்தல் . பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை.
- நீட் தேர்வு தொடர்பான போராட்டங்கள் காரணமாக காவல்துறை வழக்குகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கட்சி இலவச சட்ட உதவியை வழங்கும் என்று சிவசேனா (யுபிடி) எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே கூறினார். முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சட்ட உதவிக்காக கட்சியை அணுகுமாறும் கேட்டுக்கொண்டார்.
- சமீபத்திய மாணவர் போராட்டங்களின் போது நடந்த அனைத்து வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கூறியது. “வரையறுக்கப்பட்ட நெறிமுறை” மீறப்படும் பட்சத்தில், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் நாடு தழுவிய நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறியதாகக் குற்றம் சாட்டித் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, பல வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்டது.
- மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.







