இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

- டெல்லி காவல்துறை ஆணையர் ஜீலை 19 முதல் அக்டோபர் 18 வரை தேசிய பாதகாப்பு சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்யலாம் என ஒன்றிய அரசுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சட்டத்தின்கீழ் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் விசாரணையும் இல்லாமல் எவரையும் ஒரு வருடம் வரை காவல்துறை சிறைவைக்க முடியும்.
- தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி.கணிதம் மற்றம் பி.எஸ்சி இயற்பியல் ஆகிய படிப்புகளில் சேர்க்கை எவருமே இல்லாமலேயோ அல்லது ஒற்றை இலக்க எண்ணிலேயோ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை தீர்வு காண உதவியாக தமிழ்நாட்டில் புதியதாக இரண்டு டிஎன்ஏ ஆய்வகங்கள் திறக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு. ஏற்கனவே சென்னையிலும் திருச்சியிலும் இரண்டு ஆய்வகங்கள் உள்ளன.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.13500க்கும் சவரன் ரூ.108000க்கும் விற்பனை ஆனது.
- இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.245 எனவும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.245000க்கும் விற்பனை ஆனது.
- நீட் எதிர்ப்பு: நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு ‘கரப்பான்கள்’ அழைப்பு!
- டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று மாலைக்குள் மூட உத்தரவு!
- நாடு முழுதும் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை இமெயில் மூலமாக அனுப்பிய அமெரிக்க ஐ.டி.நிறுவன பொறியாளர் சரத் சுப்ரமணியன் சங்கர் சொந்த ஊருக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்க செல்ல வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.












