ஆரோக்கியம்
நரம்பு தளர்ச்சி, மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு…
முடக்கத்தான் கீரை
மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து அருந்தலாம்.
வாதம் நம் உடலில் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
மூட்டு வலி, கழுத்து வலி உள்ளதென்றால் வாதம் சீர் கெட்டு உள்ளது என பொருள். இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை இதனை உணவில் சேர்த்தால் வாதத்தை குறைத்திட உதவும்.
இதனால் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நரம்பு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும். மூட்டு வலி, முடக்கு வாதம் ஆகியவை உடலை விட்டு அகலும்.