Connect with us

தமிழ்நாடு

அரசு பணம் முறைகேடு: ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் பிடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

PTR 2 1

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் என்ற திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது, தற்போதைய அரசு அதன் பெயரை மாற்றி உள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், கடந்த ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்படக்கூடிய நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019-ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது, அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தனிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 1.80 கோடி ரூபாய் அரசுக்கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கில் மாற்றப்பட்டுள்ளது, ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

5 கோடி ரூபாய் அரசு பணத்தை எப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கினார்கள்? ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதுதானா? என கேள்வி எழுப்பிய நிதியமைச்சர் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதியை ஆளுநர் மாளிகை ஒதுக்கியது குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும் என அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகனும் வலியுறுத்தினார்.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?