Connect with us

தமிழ்நாடு

ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி குவித்த உதயநிதி, சபரீசன்? பிடிஆர் குரலில் பரவும் சர்ச்சை ஆடியோ!

Published

on

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வெறும் 28 நொடிகள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

#image_title

அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பிடிஆர் குரலில் உள்ளது அந்த ஆடியோ.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை. இது பிடிஆர்-இன் குரலில் உள்ளது, ஆனால் அவர்தான் பேசினாரா என்பது தெரியாது. சமூக ஊடகங்களில் வைரலாக இது பரவி வருகிறது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி குவித்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் செய்தியாளர் ஒருவருடன் உரையாடியிருக்கிறார். நாங்கள் திமுக ஃபைல்ஸ் வெளியிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் எங்களின் கூற்றுக்களை உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் வருகின்றன என அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?