Connect with us

இந்தியா

மருமகளுக்கு பிளாட் பரிசளித்த மாமனார்.. அடியாட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்..!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தான் நேரில் பார்த்ததாக அவருடைய மகன் மணிகண்டன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது நாராயணசாமி வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து கொலையை நேரில் கண்ட நாராயணசாமி மகன் மணிகண்டன் உள்பட பலரிடம் விசாரணை செய்தபோது மணிகண்டனின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

இதனை அடுத்து மணிகண்டனிடம் காவல்துறி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்த போது தந்தையை தானே கொலை செய்ததாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் அடியாள்களிடம் கொடுத்து கொலை செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 32 வயதான மணிகண்டன் வேலையில்லாமல் இருந்தார் என்றும் தந்தை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை கொலை செய்தால் அவருடைய சொத்து முழுவதும் தனக்கு வரும் என்றும் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மறைந்த நாராயணசாமிக்கு பெங்களூரில் சொந்தமாக 28 பிளாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன் ஒரு பெண்ணை திருமணம் செய்து நிலையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டு 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனா ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரையும் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதனால் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்ட அர்ச்சனாவுக்கு உதவி செய்தற்காக மணிகண்டனின் தந்தை நாராயணசாமி ஒரு பிளாட் ஒன்றை பரிசளித்து உள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு கோடி மற்றும் ஒரு பிளாட் என அடியாட்களிடம் பேரம் பேசி தனது தந்தையை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரி இல்லை என்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது மணிகண்டன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்ய அவரால் பணி அமர்த்தப்பட்ட இரண்டு அடியாட்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு பிளாட் ஒன்றை பரிசளித்த முதியவரை அவரது மகனே அடியாட்களை ஏவி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா3 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா3 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு4 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா4 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு5 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா5 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா5 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா5 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்10 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!