Connect with us

இந்தியா

மருமகளுக்கு பிளாட் பரிசளித்த மாமனார்.. அடியாட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்..!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தான் நேரில் பார்த்ததாக அவருடைய மகன் மணிகண்டன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது நாராயணசாமி வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து கொலையை நேரில் கண்ட நாராயணசாமி மகன் மணிகண்டன் உள்பட பலரிடம் விசாரணை செய்தபோது மணிகண்டனின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

இதனை அடுத்து மணிகண்டனிடம் காவல்துறி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்த போது தந்தையை தானே கொலை செய்ததாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் அடியாள்களிடம் கொடுத்து கொலை செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 32 வயதான மணிகண்டன் வேலையில்லாமல் இருந்தார் என்றும் தந்தை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை கொலை செய்தால் அவருடைய சொத்து முழுவதும் தனக்கு வரும் என்றும் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மறைந்த நாராயணசாமிக்கு பெங்களூரில் சொந்தமாக 28 பிளாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன் ஒரு பெண்ணை திருமணம் செய்து நிலையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டு 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனா ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரையும் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதனால் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்ட அர்ச்சனாவுக்கு உதவி செய்தற்காக மணிகண்டனின் தந்தை நாராயணசாமி ஒரு பிளாட் ஒன்றை பரிசளித்து உள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு கோடி மற்றும் ஒரு பிளாட் என அடியாட்களிடம் பேரம் பேசி தனது தந்தையை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரி இல்லை என்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது மணிகண்டன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்ய அவரால் பணி அமர்த்தப்பட்ட இரண்டு அடியாட்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு பிளாட் ஒன்றை பரிசளித்த முதியவரை அவரது மகனே அடியாட்களை ஏவி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!