Connect with us

இந்தியா

தேர்தல் முடிந்தவுடன் வேலையை காட்டிய மத்திய அரசு. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு..!

Published

on

நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள் கூட எண்ணப்படாத நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

———-சென்னையில் சிலிண்டரின் விலை 1068 ரூபாய் என்று விற்பனையாகி வரும் நிலையில் இந்த விலையே மிக அதிகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரூபாய் 1118.50 என இன்று முதல் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 10 மாதங்களாக உயராமல் இருந்தாலும் அவ்வப்போது சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.223 உயர்ந்து ரூபாய் 2268 என இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்4 நாட்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி1 வாரம் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்2 வாரங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு4 வாரங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்1 மாதம் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!

வணிகம்1 மாதம் ago

தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு (22/08/2023)!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!