இந்தியா
பெண் அமைச்சருக்கு ஆபாச மெசேஜ்: போலீசார் அதிரடி

அமைச்சருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு, மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அமைச்சர் பங்கஜா, தொடர்ந்து தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்போன் சிக்னல் மூலம் அந்த நபரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். புனேவில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், புனே காவல்துறையினரின் உதவியுடன் மோல் காலே (25) என்ற நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















