Connect with us

உலகம்

24 நாட்கள் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த அதிசய மனிதன்.. பிரபல நிறுவனம் தரும் ஆச்சரிய பரிசு..!

Published

on

By

24 நாட்கள் தன்னுடைய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பிரபல நிறுவனம் ஒன்று ஆச்சரிய பரிசளித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கரீபியன் தீவில் உள்ள செயின்ட் மார்டன் என்ற துறைமுகத்தில் உள்ள பாய்மரக் கப்பலை சரி செய்யும் பணியில் பிராங்கோஸ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் தனது படகில் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென வானிலை மோசமானதால் கடலில் அடித்து செல்லப்பட்டார். அவர் தனது படகு கடலில் மூழ்காமல் இருக்க பல முறைகளை கையாண்டார் என்றும் தன்னிடம் இருக்கின்ற சாப்பாட்டை வைத்து அவர் 24 நாட்கள் உயிர் பிழைத்ததாகவும் தெரிகிறது.

24 நாட்கள் நிலம் இல்லை, யாருடனும் பேசவில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை, நான் எங்கே இருக்கிறேன் என்றும் எனக்கு தெரியவில்லை, அது மிகவும் ஒரு கடினமான காலம் என்றும் நான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழந்தேன் என்றும் என் குடும்பத்தை பற்றி நான் நினைத்து கவலைப்பட்டேன் என்றும் அவர் மீட்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது படகில் ஒரு தீயை ஏற்படுத்தி அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு தகவல் கொடுக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. மேலும் தனது படத்தின் மேற்பகுதியில் உதவி என்ற வார்த்தையை எழுதி யாராவது உதவி செய்வார்களா என்று காத்திருந்தார். இந்த நிலையில் ஜனவரி 15ஆம் தேதி அவர் ஒரு விமானத்தை பார்த்ததாகவும் தன்னிடம் உள்ள ஒரு கண்ணாடியை வைத்து சூரிய ஒளியை அந்த விமானத்தின் மூலம் செலுத்த முயன்றதாகவும் அதுதான் தனக்கு பயன் அளித்ததாகவும் தெரிவித்தார்.

விமானத்தில் இருந்தவர்கள் அந்த படகை கடந்த போது சூரிய ஒளியை ஒருவர் காட்டியதை உணர்ந்ததும் அவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து உடனடியாக அவர்கள் கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். உடனே கடற்படை அந்த வழியாக சென்ற ஒரு வணிகக் கப்பலுக்கு தகவல் அளித்து அந்த நபரை காப்பாற்றி உள்ளனர்.

கிட்டத்தட்ட 24 நாட்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர் தன்னிடம் சில நூடுல்ஸ் மற்றும் மசாலா பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும் அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவருடைய துணிச்சலையும் மன உறுதியையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அவருடைய படகு மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டதால் அந்த படகை இனிமேல் பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அமெரிக்க உணவு நிறுவனம் அந்த நபருக்கு புதிய படகை தங்களுடைய செலவில் வாங்கி தருவதாகவும் உயிர் பிழைத்த அந்த மனிதருக்கு தாங்கள் கொடுக்கும் பரிசு என்றும் தெரிவித்துள்ளது.

சினிமா1 min ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா8 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா9 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா9 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்9 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா10 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்11 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்11 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு12 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+