Connect with us

இந்தியா

வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த 16 வயது மாணவன்: தெலுங்கானாவில் அடுத்தடுத்து சோகம்!

Published

on

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

நகுலா சாத்விக் என்ற 16 வயது மாணவன் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் அவன் நேற்று இரவு அங்குள்ள வகுப்பறை ஒன்றில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் நகுலா சாத்விக் வகுப்பு முடிந்த பின்னர் நேற்று இரவு 10.30 மணியளவில் தூக்கு போட்டு உயிரிழந்து இருக்க கூடும் என்றும் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது விசாரணைக்கு பின்பே கூற முடியும் என்று காவல்துறை கூறியுள்ளது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் கொடுமையால் தான் மாணவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேப்போன்று, வாரங்கால் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி பிரீத்தி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். நிஜாமாபாத் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த தாசரி ஹர்ஷா என்ற மாணவி கடந்த சனி கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் மர்ம மரணம் அடைந்தார்.

நகுலா சாத்விக்கின் தற்கொலையுடன் சேர்த்து தெலுங்கானாவில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கல்லூரி மாணவ மாணவிகள் என அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?