Connect with us

இந்தியா

அம்பானி உள்பட 3 பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மும்பை போலீசார் அதிர்ச்சி..!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீடு உள்பட 3 பிரபலங்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மும்பை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அவை பெரும்பாலும் வதந்திகளாக உள்ளன என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் கூட முதலமைச்சர் உள்பட பல பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பலமுறை வதந்தி கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தொழிலதிபர் அம்பானி வீடு, பிரபல நடிகர் அமிதாப்பச்சன் வீடு மற்றும் பழம்பெறும் நடிகர் தர்மேந்திரா வீடு ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மரும நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மும்பையில் 25 பேர்கள் கொண்ட தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாக்பூர் போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் அளித்ததாகவும் மும்பை போலீசார் அம்பானி, அமிதாப்பச்சன் மற்றும் தர்மேந்திரா வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 3 பிரபலங்களின் வீடுகளின் அருகில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மூன்று பிரபலங்களின் வீடுகள் அருகே குவிக்கப்பட்டு கூறப்படுகிறது.

மேலும் ஏதேனும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை முறியடிக்க அதிரடி படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொலைபேசி அழைப்பு விடுத்த மர்ம நபரிஅ கண்டுபிடிக்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அம்பானி வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டுகளில் பலமுறை வதந்திகள் ஏற்பட்டுள்ளது என்பதும் அவர்களின் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மிரட்டலும் ஒரு வதந்தியா அல்லது உண்மையாகவே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக உயர்ந்த Z+ பாதுகாப்பு
அளிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும்போதும் மிக உயர்ந்த Z+ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அம்பானி குடும்பத்தினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான Z+ பாதுகாப்பு வழங்குவதற்கான முழு செலவுகளும் அவர்களால் ஏற்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆரோக்கியம்1 hour ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868