Connect with us

இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 1,861 குழந்தை தொழிலாளர் வழக்குகள்: மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் விஜய் பாகெல் ஆகிய இருவரும், நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்களை பற்றிய வழக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய கேள்வியை எழுப்பினர். இவர்களின் கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ரமேஸ்வர் தெளி, எழுத்துப் பூர்வமாக இன்று அவையில் பதில் அளித்தார்.

குழந்தை தொழிலாளர் வழக்குகள்

மத்திய மந்திரி ரமேஸ்வர் தெளி அளித்த பதிலில், நம் நாட்டில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், கடந்த 3 வருடங்களில் மொத்தமாக 1,861 வழக்குகள் பதிவாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 772 குழந்தை தொழிலாளர் வழக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 476 குழந்தை தொழிலாளர் வழக்குகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டில் சுமார் 613 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

அதிகபட்ச வழக்குகள்

இதில் அதிகபட்சமாக 685 வழக்குகள் தெலங்கானா மாநிலத்தில் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 186 வழக்குகளுடன் அசாம் மாநிலம் உள்ளது. மேலும், மிக குறைந்த அளவில் அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சத்தீஷ்கர், மேகாலயா, டாமன் டையூ மற்றும் பிற மாநிலங்களில் 2 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, மத்திய அரசு பன்முக செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை, இலவச கல்வி உரிமை, புனரமைப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்பட பல விரிவான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குழந்தை தொழிலாளர் வழக்குகளை அரசு கட்டுப்படுத்தி வருகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக நீக்குவதற்கு பல்வேறு சட்டங்களும் உள்ளன என உறுப்பினர்களிடம் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

சினிமா6 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா6 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு7 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா7 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு8 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா8 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா8 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா8 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்13 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!