இந்தியா
மதுபானத்திற்கு பதில் சானிடைசர் குடித்த 6 பேர் பரிதாப பலி!
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபானத்திற்கு பதிலாக மாற்று போதை தரும் பானங்களை குடித்ததில் ஏராளமான பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில மாநிலங்களில் முழுஅடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுவுக்கு பதிலாக சானிடைசர் குடித்த சிலர் உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக அங்கு மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள யாவத்மால் என்ற மாவட்டத்தில் உள்ள வாணி என்ற இடத்தில் மதுபானம் கிடைக்காத ஏக்கத்தில் போதை ஆசாமிகள் சிலர் கிருமிநாசினியான சானிடைசரை பிடித்துள்ளனர்.
6 பேர் ஒன்றாக அமர்ந்து சானிடைசரை குடித்த நிலையில் இதில் 3 பேர் தங்களது வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் மீதமுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மதுவுக்கு பதிலாக கிருமிநாசினியான சானிடைசர் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.