Connect with us

இந்தியா

பேட்மிண்டன் விளையாடியபோது திடீரென மாரடைப்பு.. பரிதாபமாக மரணம் அடைந்த 38 வயது நபர்..!

Published

on

பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து வருவது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி 19 வயது இளைஞர் ஒருவர் ஹைதராபாத்தில் அருகே திருமண விருந்து ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்பட்டது என்னது தெரியவந்தது.

heart attackஅதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜிம் பயிற்சி செய்து கொண்டிருந்த தெலுங்கானா மாநில போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் புஷ்ஷப் என்ற உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் சேர்ந்த ஷ்யாம் யாதவ் என்ற 38 வயது நபர் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணம் அடைந்தார். அவர் தினமும் இரவில் கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன் விளையாடுவது வழக்கம் என்றும் சக ஊழியர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு வந்து சரிந்து விழுந்ததாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர மருத்துவ பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டும், அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதற்கு கொரோனா வைரஸ் நோய் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னரே இதுபோன்ற இளம் வயதினருக்கு எந்தவிதமான முன் அறிகுறி இன்றி மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு4 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா4 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா4 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா5 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா5 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா5 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா7 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்7 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா8 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு9 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!