Connect with us

இந்தியா

மீண்டும் ஒரு கொடூரம்.. 3 வயது சிறுமியை கடித்து குதறிய 20 நாய்கள்..!

Published

on

தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால் கடிக்கப்பட்டு படுகாயம் நடந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நகரங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி 20 நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாண்டியா என்ற கிராமத்தில் வசிக்கும் அவதேஷ் கங்கா அவர் என்பவரின் மகள் பாரி. 3 வயதான இவர் சமீபத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென இருபது நாய்கள் கூட்டமாக வந்த அந்த சிறுமியை தாக்கி உள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் இழுத்துச் சென்றதாகவும் சரமாரியாக நாய்கள் மாறி மாறி அந்த சிறுமியை கடித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்ததாகவும் தெரிகிறது.

#image_title

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ஏற்கனவே உத்தர பிரதேச மாநில அரசு கடும் விதிமுறைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியபோது, ‘தெரு நாய்களுக்கு போதுமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அந்த நாய்கள் ஆக்ரோஷமாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் பெரும்பாலான நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை என்றும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தெரு நாய்களை வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் என்றும் இலவசமாக தெருநாய்களை வளர்ப்பவர்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

சினிமா செய்திகள்10 hours ago

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

kamal
சினிமா செய்திகள்10 hours ago

மணிரத்னம் மீது பொறாமையாக உள்ளது: கமல்ஹாசன்

உலகம்10 hours ago

விவாகரத்து செய்த உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. மனைவிக்கு இழப்பீடாக $1 பில்லியன்..!

வேலைவாய்ப்பு11 hours ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 hours ago

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Dasara Movie Review image
விமர்சனம்11 hours ago

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

இந்தியா11 hours ago

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

சினிமா11 hours ago

”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சினிமா11 hours ago

பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!

தமிழ்நாடு13 hours ago

கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேலைவாய்ப்பு2 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு7 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

வேலைவாய்ப்பு3 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு22 hours ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!