Connect with us

இந்தியா

மீண்டும் ஒரு கொடூரம்.. 3 வயது சிறுமியை கடித்து குதறிய 20 நாய்கள்..!

Published

on

தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால் கடிக்கப்பட்டு படுகாயம் நடந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நகரங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி 20 நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாண்டியா என்ற கிராமத்தில் வசிக்கும் அவதேஷ் கங்கா அவர் என்பவரின் மகள் பாரி. 3 வயதான இவர் சமீபத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென இருபது நாய்கள் கூட்டமாக வந்த அந்த சிறுமியை தாக்கி உள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் இழுத்துச் சென்றதாகவும் சரமாரியாக நாய்கள் மாறி மாறி அந்த சிறுமியை கடித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்ததாகவும் தெரிகிறது.

#image_title

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ஏற்கனவே உத்தர பிரதேச மாநில அரசு கடும் விதிமுறைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியபோது, ‘தெரு நாய்களுக்கு போதுமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அந்த நாய்கள் ஆக்ரோஷமாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் பெரும்பாலான நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை என்றும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தெரு நாய்களை வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் என்றும் இலவசமாக தெருநாய்களை வளர்ப்பவர்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

author avatar
seithichurul
இந்தியா54 நிமிடங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா