Connect with us

இந்தியா

39 வயது பெண் சிஇஓ அதிகாரி சாலை விபத்தில் மரணம்.. வாக்கிங் சென்றபோது ஏற்பட்ட விபரீதம்..

Published

on

முன்னணி நிறுவனத்தின் பெண் சிஇஓ ஒருவர் அதிகாலையில் வாக்கிங் சென்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது என்றும் சாலை விபத்துக்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அதிவேகமாக கார் ஓட்டுதல், குடித்துவிட்டு கார் ஓட்டுதல் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் விபத்துக்கள் அதிகமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று காலை வேகமாக வந்த எஸ்யூவி கார் மோதியதில் 39 வயது பெண் ஒருவர் பலியானார் என்றும் அவர் முன்னணி நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓவாக பணிபுரிந்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சாலை விபத்தில் பலியானவர் ராஜலட்சுமி என்றும் அவர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் ராஜலட்சுமி சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த எஸ்யூவி கார் சாலை டிவைடரில் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பிறகு அந்த வாகனம் முழு வேகத்துடன் ராஜலட்சுமி மீது மோதியதாகவும் இதனை அடுத்து ராஜலட்சுமி தூக்கி வீசப்பட்டு பல அடி தூரத்தில் விழுந்ததாகவும் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக இருந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர் எஸ்யூவி காரை ஓட்டிய டிரைவரை கைது செய்துள்ளனர். 23 வயது சுமர் என்பவர் தான் இந்த காரை ஓட்டியவர் என்றும் அவர் பொழுதுபோக்கு துறையுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்திய தண்டனை சட்டம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கவனக்குறைவாக காகனம் ஓட்டுதல், மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

author avatar
seithichurul
இந்தியா10 நிமிடங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு25 நிமிடங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்34 நிமிடங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா50 நிமிடங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா