Connect with us

உலகம்

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பின்னரும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிலர் அலுவலகத்திற்கு வர சொன்னால் தங்கள் வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர் என்பதும் எனவே ஊழியர்களை இழக்காமல் இருப்பதற்காக சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை தொடர்ந்து தந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில நிறுவனங்கள் ஹைபிரிட் என்று கூறப்படும் மூன்று நாட்கள் அலுவலகம், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை கடைபிடித்து வந்தன.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே வொர்க் ப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வந்து முழுவதுமாக அலுவலகத்தில் வந்து பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அலுவலகம் வராத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் ஊழியர்கள் அலுவலகம் வர தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் முன்னணி நிறுவனங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

அமேசான்: இந்நிறுவனம் தனது ஊழியர்களை மே 1 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது. சி.இ.ஓ ஆண்டி ஜெஸ்ஸி ’மேலாளர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வருவதை வரும் அக்டோபர் மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ்: கார் தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களை ஜனவரி 30 முதல் அலுவலகத்திற்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டா: இந்நிறுவனத்தின் முதல் பெரிய அளவிலான 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு மேலும் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் அறிவித்தார். மெட்டா தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டு கொண்டாலும், மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது சக ஊழியர்களுடன் நேரில் பணியாற்றுவது தான் சிறந்தது என்று கூறி வருகிறார்.

நியூஸ் கார்ப்: வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வெளியீட்டாளர் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு, உடனடியாக அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குத் திரும்பும்படி தெரிவித்துள்ளது. இனிமேல் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

Snap Inc: இந்நிறுவனத்தின் சி.இ.ஓ எவான் ஸ்பீகல் தனது ஊழியர்களை பிப்ரவரியில் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20% பணியாளர்களை பணிநீக்கம் செய்த பின்னர் இந்த அறிவிப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்பக்ஸ்: இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் ஷுல்ட்ஸ் தனது ஊழியர்களை ஜனவரியில் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப சொன்னார். கார்ப்பரேட் ஊழியர்கள் வாரத்தில் ஒன்று முதல் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Rajinikanth
சினிமா செய்திகள்19 mins ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்29 mins ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா3 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு4 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized5 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு7 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா9 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு9 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா10 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

சினிமா11 hours ago

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ் அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு2 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!