இந்தியா
எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை: மத்திய அரசு தகவல்!
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இதுகுறித்த உறுதிமொழியை தெரிவித்துள்ளது .
இது குறித்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவில்லை என்றும் அதனால் கொரோனா சமயத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாதாடப்பட்டது.
இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுத்து பாலியல் தொழிலாளர்கள் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் போது ரேஷன் கார்டு ஆதார் அட்டை ஆகியவை பாலியல் தொழிலாளர்களுக்கு எதன் அடிப்படையில் வழங்குவீர்கள் என நீதிபதி கேள்வி போது எந்தவித ஆவணம் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை அடுத்து பாலியல் தொழிலாளர்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்பட எந்த அடிப்படை விவரங்களும் இல்லாமல் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.