இந்தியா
ரஷ்யா தாக்குதல்: மேலும் ஒரு இந்திய மாணவர் படுகாயம்!
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் பலியாகிய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட பலநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று திடீரென கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் குண்டு வீச்சில் பலியானார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில மாநில நவீன் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் இந்திய மக்கள் மீளத நிலையில் மேலும் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நவீன் உடன் சென்ற இரு மாணவர்களில் ஒரு மாணவனுக்கு காயம் என கூறப்படுகிறது, இந்த தகவலை கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் உறுதி செய்துள்ளார்.