சினிமா செய்திகள்
ஏன் திரைப்பட டிக்கெட்களுக்கு இந்த கட்டுப்பாடு? அரவிந்த் சாமி கேள்வி?

திரைப்பட டிக்கெட்கள் அதிகளவில் இருப்பதாக நீண்ட காலமாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் திரைப்பட டிக்கெட் கட்டணங்கள் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த் சாமி, “திரைப்பட டிக்கெட்டுகளின் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு ஒருபோதும் புரியவில்லை. வெவ்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விலையில் உற்பத்தி செய்யப்பட்டு, வெவ்வேறு தரமான திரையரங்கங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படும் வெவ்வேறு தயாரிப்புகளுக்கு ஒரே விலை எப்படி?” என்று கேட்டுள்ளார்.
I have never understood why the price of movie tickets needs to be restricted. How do u hv the same price for different products, produced at different costs, exhibited through different quality of theatres, in different areas with different real estate investments? ????????♂️
— arvind swami (@thearvindswami) January 8, 2021
அரவிந்த் சாமி கேட்கும் கேள்வி நியாயம்தான் என்றாலும், விவசாயிகளும் திரைப்படங்கள் எடுப்பது போன்று வெவ்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விலையில் உற்பத்தி செய்யப்பட்டு, வெவ்வேறு தரமான காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் லாபம் என்பது பெரும்பாலும் கிடைப்பதில்லை.
அப்படிதான் திரைத்துறையும். திரைப்பட டிக்கெட் கட்டணத்தைத் திரைப்பட தயாரிப்பு செலவுகளை வைத்தும் திரை அரங்குகளை வைத்தும் தான் விற்பனை செய்ய வேண்டும் என்றால், படத்தை ரிலீஸ் செய்யும் போது அதற்கான கணக்கைப் போட்டு டிக்கெட்டின் அதிகபட்ச விலையை நிர்ணைக்க முடியுமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணங்கள் முறையாகத் தயாரிப்பாளர்களுக்கு வருகிறதா? அதில் உள்ள குளறுபடிகளுக்கு எல்லாம் உங்களிடம் தீர்வு உள்ளதா? அதை செயல்படுத்த நீங்கள் எடுத்த முயற்சி என்ன? இங்கு டிக்கெட் விலையை படங்கள் முடிவு செய்வதில்லை. படத்தின் ஹீரோதான் முடிவு செய்கிறார். ஹீரோக்களின் மதிப்பை வைத்து முதல் நாள் ரிலீஸின் போது அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. படம் நன்றாக இருந்தால் அதற்கு ஒரு கட்டணம்? படங்கள் சரியில்லை என்றால் அதற்கு ஒரு கட்டணம்? இப்படிதானே திரை அரங்குகளும் கொள்ளை அடிக்கின்றன. அப்போது மட்டும் ஏன் நான் இவ்வளவு செலவு செய்துதான் எனது படத்தைத் தயாரித்தேன். ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று எந்த தயாரிப்பாளரும் ஹீரோவும் கேட்பதில்லை. நீங்கள் திரை அரங்குகளுக்குச் செல்லும் போது உங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்களா? காசு கொடுத்து வாங்கினாலும், அதை யாரோ ஒருவர் வாங்கி இருப்பார். அதை உங்களது மேனேஜர்கள், ஊழியர்கள் வழங்கி இருப்பார்கள். அது எவ்வளவு என்று கூட நீங்கள் கணக்கு பார்த்து இருக்க மாட்டீர்கள்.
திரைப்பட சிடி-களுக்கு ரெய்டு செல்வது போல உங்கள் படம் வெளியாகும்போது தியேட்டர்களுக்கு சென்று அவர்கள் வசூலிக்கும் கட்டணம் குறித்தும் ரெய்டு நடத்தி பாருங்கள். படம் பார்க்க வருபவர்கள் இந்த தியேட்டர்களுக்கு இவ்வளவு கட்டணம் அளித்து வருகிறார்களா என்று அதிர்ச்சிக்குள்ளாவீர்கள்.













