சினிமா
ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஒரண்ட‘ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

எப்போதும் வித்தியாசமான தலைப்புகளையும் கதைகளையும் தேர்ந்தெடுக்கும் சுசி கணேசன், இம்முறையும் அதே பாணியில் இத்தலைப்பை வைத்துள்ளார். 2017-ல் வெளியான ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்குப் பிறகு, சுசி கணேசன் தமிழ் சினிமாவில் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக மாற்றியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் முதல் பொதுமக்களின் நேரடி உரையாடல்கள் வரை, ‘ஒரண்ட’ என்ற தலைப்பே தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் முதல் பேசுபொருள் அதன் டைட்டிலாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்ட இயக்குநர் சுசி கணேசன், மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 85% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
















