இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு!
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக மருத்துவமனைகளுக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.
இருப்பினும் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் போதுமான அளவு இல்லை என்றும் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்/ ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக வந்த புகாரை அடுத்து பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.