Connect with us

தமிழ்நாடு

12 மணிக்கு மூடப்பட்டது டாஸ்மாக் கடைகள்: ஒரே நேரத்தில் குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8 மணிக்கே டாஸ்மாக் கடை முன் குடிமகன்கள் குவிந்திருந்தனர்

கடை திறந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான குடிமகன்கள் மாஸ்க் அணியவில்லை என்பதும் தனிமனித இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு தான் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக 12 மணி நெருங்க நெருங்க கடை மூடி விடுவார்கள் என்ற அச்சத்தில் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு சரக்குகளை கையில் வாங்கி கொடு ஆட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சலூன் கடைகள் உட்பட மற்ற அனைத்து கடைகளையும் மூடி விட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைப்பது எந்த வகையில் நியாயம் என மற்ற கடைக்காரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை அடியோடு ஒழித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் என்பதே அனைவரும் கருத்தாக இருக்கிறது

நாளை முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த கோப்பில் கையெழுத்திடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவினர் அதை ஆளுங்கட்சியாக இருக்கும்போது செயல்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?