Connect with us

தமிழ்நாடு

கொதித்தெழுந்த பெண்கள்: டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்!

Published

on

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து கடையை முற்றுகையிட்டு, டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

கொதித்தெழுந்த பெண்கள்

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதையும் பொருட்படுத்தாமல், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தொடர்ந்து மதுபானத்தை விற்றுக் கொண்டிருந்தனர். இதனால் சினம் கொண்ட பெண்கள், அங்கிருந்த காலியான பீர் பாட்டில்களை எடுத்து கடை வாசலில் போட்டு உடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது விற்பனையை நிறுத்தி விட்டு, பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு அருகில் இருந்த மதுபானம் குடிக்கும் பாருக்குள் பெண்கள் நுழைந்து, அங்கிருந்த மேசை மற்றும் நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கி பாரை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கு குடித்து விட்டு செல்லும் ஆண்கள், அவ்வழியே செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதால், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரை சூறையாடினர்.

புகார் அளித்தும் பயனில்லை

ஏற்கனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே நாளை முதல் இந்தக் கடையைத் திறக்க கூடாது. உடனடியாக டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர். இதற்கு காவல் துறையினர் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?