Connect with us

இந்தியா

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.3.06 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!

Published

on

அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 3.06 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று அமேசான் பே என்பதும் பண பரிவர்த்தனை செயலியான இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி பெரும் தொகையை அபராதம் விதித்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளன.

மின்னணு வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் பே நிறுவனம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் நிதி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமேசான் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக ரூபாய் 3.06 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ பண பரிவர்த்தனை சார்ந்த விதிமுறைகளை அமேசான் பே பின்பற்றவில்லை என்றும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கேஒய்எசி தொடர்பான ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை அமேசான் பே நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்றும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காததற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று காரணம் கேட்டு அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு அமேசான் நிறுவனம் அளித்த பதிலை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அமேசான் பே நிறுவனம் ரிசர்வ் வங்கி விதித்த விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை உறுதி செய்ததை அடுத்து அபராதம் விதிக்க முடிவு செய்தது.

இதனை அடுத்து அமேசான் பே நிறுவனத்திற்கு ரூ.3.06 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமேசான் பே நிறுவனத்தின் விதிமீறல் செயலுக்காக இந்த அபராத உத்தரவு விதிக்கப்பட்டது என்றும், அமேசான் பே செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய பரிவர்த்தனைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?