Connect with us

உலகம்

கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி.. முன்னாள் பிரதமர் தலைமறைவு..!

Published

on

முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதன் தெரிந்ததே. பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த இம்ரான்கான் 1996 ஆம் ஆண்டு தனிக்கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார் என்பதும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சிகள் திடீரென வாபஸ் பெற்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பல்வேறு நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த போது அவருக்கு உலக தலைவர்கள் பரிசு பொருட்களை வழங்கியதாகவும் பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசு பொருள்கள் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் தனக்கு வந்த பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்று விட்டதாகவும் அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான பணத்தை லாபமாக பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் அவரை ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் மூன்று முறை ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவரை கைது செய்து ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனை அடுத்து உடனடியாக இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கான் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்றும் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இம்ரான் கானை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது இம்ரான் கான் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கைது செய்ய விடாமல் கட்சித் தொண்டர்கள் தடுக்கின்றனர் என்றும் ஆனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.

ஆரோக்கியம்1 hour ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்5 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868