இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

- நாளை 18.06.2026 கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர். ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது.
- திருமண வழக்குளை விசாரிக்கம் நீதிமன்றங்கள் மனநலக் கோளாறு வழக்குகள் விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்களை வெளியிடாமல் “எக்ஸ்“ மற்றம் “ஒய்“ என குறிப்பிட உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. திருமண வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவர்களின் வாழ்நாளில் எஞ்சிய பகுதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கருத்து.
- தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் உரிமம் புதுப்பித்தல் ஆகியவை ஜீலை 1 முதல் இணைய வழியில் விண்ணப்பித்து பெறப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
- ரூ.75000 வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் விஜய் அறிவிப்ப.
- நாடு முழுதும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்து உள்ளிட்ட “சிரப்“ அடிப்படையிலான மருந்துகளை விற்பதை தடை செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
- ஆம்னி பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்காதது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டண விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
- நீட் தேர்வு தொடர்பாக இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதாற்கு அதன் சி.இ.ஓ. மாவெல் துரோவ் எதிர்ப்பு. வினாத்தாளை கசியவிட்டவர்களுக்கு பதில் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கு மேற்பட்ட பயனர்கள் தண்டிக்கப்படுவதாக தகவல்.
- தூத்துக்குடி துறைமுகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகள் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.4.51 கோடி பென்ஷன் பெற்று மோசடி கடந்த 7 ஆண்டுகளில் ரூ.4.51 கோடி மோசடி என வழக்கு . துறைமுக அதிகாரிகள் 4 பேர் உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏன் சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது?: நீதிமன்றம் சிறப்பு கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது ஏன்? பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர், இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு ஆணை பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தாக்கல் செய்யலாம்: நீதிபதி

















