இந்தியா
தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்பட்டதை அடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிப்பு. இத்தோடு சேர்த்து தமிழ்நாட்டில் தற்பொழுது 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் எந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் எதற்கு வராது என்று ஒரே களேபரமாக இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல் நகர்வுகள். மேலும் 9 தொகுதி சட்டமன்ற உறுப்பிர்களை தகுதியிழக்கச் செய்ய் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வரும் செய்திகள் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளன.
தமிழ்நாடு முதல்வர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பெரம்புர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு நடிகை த்ரிஷா மற்றம் நடிகர் ராகவா லாரன்ஜ் ஆகிய 2 பேரில் ஒருவர் தவெக சார்பில் போட்டியிடலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதனை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பின் பொது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் தாராபுரம் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆனது. இப்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததால் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க்க் கோரி அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் விஜயின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுகவின் இனிகோ சம்பத் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இப்போது விராலிமலை தொகுதி ஒன்றுதான் வழக்கு இல்லாமல் இருக்கிறது. அதற்கும் யாராவது வழக்கு போட்டுவிட்டால் அவ்வளவுதான்.
இது மட்டுமல்ல தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மேலும் 21 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் த.வெ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி குறித்து தேர்தல் ஆணையம் உண்மை தான்மை குறித்து சோதித்ததில் 9 பேர் போலி கல்வி தகுதி சமர்ப்பித்ததை கண்டுபிடித்து உள்ளது!
1) கல்வி அமைச்சர் ராஜ்மேரகன். 2) தஞ்சாவூர் MLA- விஜய் சரவணன்.
3) விருதுநகர் MLA- செல்வம். 4) தாம்பரம் MLA- சரத்குமார்.
5) குமாரபாளையம் MLA- விஜயலட்சுமி. 6) கவுண்டன் பாளையம் MLA- கணிமொழி. 7) ஆவடி MLA- ரமேஷ். 8. அம்பத்தூர் MLA- பாலமுருகன்.
9) போளூர் MLA-ஆகிய 9, MLA க்களும் பிரமாணப்பத்திரத்தில் போலி கல்விதகுதியை குறித்துள்ளதை தேர்தல் ஆணையம் ஆதார பூர்வமாக கண்டு பிடித்து விட்டது. விரைவில் இந்த 9 MLA க்களின் MLA-பதவிகள் பறிக்கப்படும் என்று டெல்லி சோர்ஸ் தெரிவித்துள்ளது!!
ஆக மொத்தம் 15 சட்டமன்ற உறுப்பினர் பணியிடங்களுக்கு தேர்தல் நடக்கப் போவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஆதவ் அர்ஜீனா தலைமையில் 10 உறுப்பினர்கள் விஜய்குகு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டு அரசியலின் இந்த மாற்றங்கள்தான் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு வரவைத்த மாற்றமா என்று மிஸ்டர் சாமானிய பொதுஜனம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
ஒரு தொகுதியில் இடைத் தேர்தலுக்க ரூ.20 கோடி செலவாகக்கூடும் என்ற நிலையில் இத்தனை தொகுதிகளில் தேர்தல் என்றால் எவ்வளவு அரசு நிதி உழைப்பு வீணாக இருக்கிறதோ என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கூடுதல் செலவெல்லாம் பொதுமக்கள் தலையிதான் வரி வட்டி என்று வந்து விழும். நல்ல மாற்றத்தை விரும்பினார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று வட இந்திய ஊடகங்கள் கேலி பேசத் தொடங்கி விட்டன.

















