Connect with us

தமிழ்நாடு

கைது நடவடிக்கை வேண்டாம், நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகை யாஷிகா ஆனந்த்!

Published

on

கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா.

#image_title

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். யாஷிகா கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் யாஷிகாவின் நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 21-ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் யாஷிகா நேரில் ஆஜராகி தனது பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார். இதனையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மேலும் அடுத்த மாதம் 25-ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

author avatar
seithichurul
இந்தியா4 நிமிடங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்17 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்20 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா20 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!