Connect with us

தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை: கைவிரித்த கவர்னருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து இருந்து வருகிறது

இது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தபோது பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதில் இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என அறிவித்திருந்தது. இதனை அடுத்து தமிழக அரசு இது குறித்து தீர்மானம் ஒன்றை இயற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததை அடுத்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இது குறித்து கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் தற்போது பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கவர்னர் அறிவித்துள்ளார்

உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து தகவல் அளித்ததாக தெரிகிறது. மேலும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன் என்றும் ஆனால் இது குறித்து இறுதி முடிவு குடியரசுத்தலைவர் தான் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பேரறிவாளன் விடுதலை குறித்து கவர்னரின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறியபோது, ‘எழுவர் விடுதலையில் தமிழக அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து இருப்பது, அரசியலமைப்பை அவமதித்தற்கு சமம்; தமிழக அரசு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இடைக்காலமாக எழுவரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?