இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

- சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஸ்பீக்கரில் பாடல் வீடியோ இசைப்பது ஆகியவற்றுக்கான அபராதத்தை ரூ.500 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிப்பு. மேலும் விதிகளை மீறுவோரை ரயில் நிலைய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிப்பு.
- அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடலும் தொடர்ந்து தேசியப் பாடலும் (வந்தே மாதரம்) இறுதியாகத் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அசல் வரிகள் மற்றும் உச்சரிப்பை துல்லியமாகப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றம் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
- ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு. 2 பேர் உயிரிழப்பு. 4 பேருக்கு பாதிப்பு உறுதி. சுகாதாரத்துறை கண்காணிப்பு தீவிரம்.
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தின் சோன்பட் முதல் ஜிந்த் வரையிலான 90 கிலோமீட்டர் துஸரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும்.
- ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.350 கோடிக்கு வாங்க விஜய் திட்டம்.
- வியட்நாமில் 32 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 19 இந்தியர்கள் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களில் சில தமிழர்களும் இருப்பதாக தகவல்.















