இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

- வீட்டில் இருந்த படியே பத்திரப் பதிவு. ஆகஸ்டு 17 முதல் கட்டாய அமல். அரசாணை வெளியீடு. காத்திருப்பு நேரம் குறையும்.
- 2006ல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 55 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 38 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை என்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டில் குஜராத் உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
- கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப் பணிகளின்போது எடுக்கப்பட்ட மண் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு. 7 பேர் காணவில்லை.
- டாஸ்மார்க் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 25 % ஊதிய உயர்வு. மதுவிலக்குத்துறை ஆயத்தீர்வைத்துறை அறிவிப்பு.
- கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள கணக்கு மீதான முடக்கத்தை நீக்கி உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
- தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதால் 2026ம் ஆண்டிற்கு தமிழ்நாட்டின் 650 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு.
- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 19.10.2026 வரை நீட்டிப்பு.
- ஆரோக்யா நிறுவனம் நாளை ஜீலை 9 ம் தேதி முதல் பால் மற்றும் தயிரின் விலையை 3 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
- பசிபிக் கடலில் 3 டிகிரி வெப்பம் உயர்வு: ‘சூப்பர் எல்-நினோ’ உருவாக வாய்ப்பு! உஷாராகும் வேளாண்மைத்துறை!
- இந்திய குடும்பங்களில் உள்ள சுமார் 30000 டன் தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு ஆகஸ்டு 2026 சுதந்திர தினத்திற்கு முன்பாக “கோல்டு மானிடைசேஷன் 2.0“ திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் தங்க இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது.











