Connect with us

தமிழ்நாடு

திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்: நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து!

Published

on

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து ஒன்றை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது பீகார் அரசு. நிலைமையின் தீவிரம் அந்த அளவுக்கு உள்ளது. தேசிய பிரச்சனையாகவே இது உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பொய்யான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக காவல்துறையும், தமிழக அரசும் துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என கூறியுள்ளார். இவரது இந்த சர்ச்சை பதிவுக்கு பல திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?