செய்திகள்
2026 முதல் 8வது ஊதியக் குழு அமல் – அரசு ஊழியர்களுக்கு 7 மடங்கு சம்பள உயர்வு!

8வது ஊதியக் குழு வரும் 2026 முதல் அமல் – மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு காத்திருக்கிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்காக 8வது ஊதியக் குழு (8th Pay Commission) 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே மோடி அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன் மூலம் சம்பள உயர்வுடன் பல புதிய சலுகைகளும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
🔹 ஏப்ரல் 2026 முதல் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் வாய்ப்பு.
🔹 DoPT விதிகளின்படி பணியமர்த்தல்கள் நடைபெறும்.
🔹 Fitment Factor 2.57 இலிருந்து 2.85 ஆக உயரக்கூடும்.
🔹 இதன் மூலம் 7 மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
எவ்வளவு சம்பள உயர்வு?
உதாரணமாக, தற்போது ரூ.50,000 அடிப்படை சம்பளமுள்ள ஒருவரின் சம்பளம், 8வது ஊதியக் குழுவின் படி ரூ.1,42,500 ஆக உயரக்கூடும். இதில் 30% வீட்டு வாடகைப்படி (HRA) சேர்க்கப்பட்டால், மொத்த சம்பளம் ரூ.1,57,500 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மை:
8வது ஊதியக் குழுவின் காரணமாக, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கும். இது அரசுப் பணியாளர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் நிதி உறுதியையும் தரவிருக்கிறது.
8வது ஊதியக் குழு எப்போது அமல்?
புதிய ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் எனவும், அதற்கான அனைத்து பரிசீலனைகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













