இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?… வாங்க பார்ப்போம்…
மாற்றம்.1. பேருந்துகளில் பயணம் செய்வோர் சத்தமாக பாட்டு வீடியோ பார்ப்பது
கேட்பது கூடாது. இயர்பொன் போட்டு கேட்க வேண்டும். தவறுபவர்களுக்கு
தண்டனை கிடைக்கும்.
மாற்றம்.2. இரயில் பயணத்திற்கான தட்கல் முன்பதிவு திட்டத்தில் கவுண்டரில்
டிக்கெட் பெறும் நேர அட்டவணை மாற்றப்படுகிறது. காலை 8.30 மணி
முதல் 9.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். ஏசி தட்கல்
முன்பதிவுகளுக்கு 10 டிக்கெட்டுகளும் ஏசி அல்லாத முன்பதிவுகளுக்கு
15 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். இவற்றிற்கு முன்கூட்டியே டோக்கன்
வழங்கப்படும்.
மாற்றம்.3. ரூபாய் நோட்டுகள் சீக்கிரமாக சேதடைவதை தடுக்கும் விதமாக
பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20
நோட்டுகள் முதல்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக வர உள்ளன.
மாற்றம்.4. அஞ்சலகங்களில் பதிவுத் தபால் கட்டணம் மற்றும் விரைவுத் தபால்
கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.
மாற்றம்.5. மக்கள்தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக வந்து எடுக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. 33
கேள்விகள் கேட்கப்பட உள்ளன. அடையாள அட்டை அணிந்து வரும்
பணியாளர்களிடம் மட்டுமே விவரங்களை வழங்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றம்.6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்
பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் பிறப்பு பதிவு செய்யா விட்டால் மாவட்ட
ஆட்சியரிடம் முறையிட்டே பெற இயலும். 2 ஆண்டுகளில் இறப்பு பதிவு
செய்யா விட்டால் நீதிமன்றம் சென்றே பெற இயலும்.
மாற்றம்.7. வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றம்.8. கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதில் சில வங்கிகள் சில
மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன.
மாற்றம்.9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் CKYC 2.0 என்ற புதிய ஆதார்
அடிப்படையிலான நடைமுறை அறிமுகமாகிறது. வாடிக்கையாளர்களின்
தனிப்பட்ட KYC தகவல்களை பகிர்வதற்கு தனிப்பட்ட ஒப்புதல் பெறப்படும்.
மாற்றம்.10. ஆர்பிஐ அறிவிப்பின்படி ஆகஸ்டு மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள்
விடுமுறை நாள்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு பட்டியல்
வெளியிடப் பட்டுள்ளது.
மாற்றம்.11. ஆகஸ்டு 5ம் தேதி தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டும் ஆகஸ்டு 6ம்
தேதி வேளாண் பட்ஜெட்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மாற்றம்.12. ஆகஸ்டு 17ம் தேதி முதல் வருகையில்லா பதிதிரப்பதிவு திட்டம்
அமல்படுத்தப்பட உள்ளது. வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்ய முடியும்.
மாற்றம்.13. பி.எஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களுக்குத் தேவைப்படும்
தொகையினை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாற்றம்.14. மின் கட்டணம் அதிகமாக வரப்பெற்றுள்ளதாக புகார்களின்
அடிப்படையில் அதனை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிகளை தொடங்க உள்ளனர்.
மாற்றம்.15. ரேஷன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு வீடு தேடி வந்து பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்
ஆகஸ்டு 4 மற்றும் 5 தேதிகளில் பொருள்கள் வழங்கப்படும்.








