Connect with us

கிரிக்கெட்

பெண்கள் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏலம் எப்போது? ஸ்மிருதி மந்தனா எடுக்க போட்டா போட்டி!

Published

on

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது தெரிந்தது.

ஆண்கள் ஐபிஎல் போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அணிகளின் ஏலத்தில் கிடைத்த தொகையை விட இந்த தொகை அதிகம் என்பதால் பெண்கள் ஐபிஎல் மிகப்பெரிய சாதனை படைத்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஏலம் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வீராங்கனைகளின் ஏலம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகளின்படி வீராங்கனைகளின் ஏலம் பிப்ரவரி 10 அல்லது 11-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்கூர் ஆகிய முக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வத்துடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் உலகின் முக்கிய நாடுகளில் உள்ள வீராங்கனைகளும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை இந்த தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 7 அணிகளில் 5 அணிகள் ஏலம் விடப்பட்டது.

அகமதாபாத் அணியை அதானி குரூப் ரூ.1289 கோடிக்கு எடுத்துள்ளது. மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.901 கோடிக்கும், டெல்லி அணியை , டெல்லி கேபிடல்ஸ் ரூ.810 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஏலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷ தனது டுவிட்டரில் கூறியதாவது: “இன்று கிரிக்கெட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மொத்த ஏலத்தில் ரூ.4669.99 கோடியை நாங்கள் பெற்றோம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தை குறிக்கிறது. நமது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கு வழி வகுக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?