செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் தொடங்கியதிலிருந்து பெண்களின் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் முதல் கட்டம் நிறைவு
ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் மாநிலம் முழுவதும் நடைபெற்ற முதல் கட்ட முகாம் நிறைவடைந்தது. இந்த முகாமில் லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்ப பரிசீலனை தொடக்கம்
இந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 15 முதல் விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன.விண்ணப்ப நிலை அப்டேட்
விண்ணப்பித்த பெண்களுக்கு அவர்களின் விண்ணப்ப நிலை குறித்து அப்டேட் செப்டம்பர் முதல் வாரம் முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.இன்னும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு
தகுதியுள்ள பெண்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.புதிய ரேஷன் கார்டு வைத்தவர்களுக்கும் வாய்ப்பு
புதிய ரேஷன் கார்டு பெற்று, ஆக்டிவேட் செய்தவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து தகுதிகளும் இருந்தால்தான் விண்ணப்பம் ஏற்கப்படும். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு மட்டுமே புதிய பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்படுவர். எனவே தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.















