Connect with us

தமிழ்நாடு

சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூற ஆர்.என்.ரவி யார்? உள்நோக்கம் உள்ளது… அன்புமணி சாடல்!

Published

on

தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆளுநரின் செயலில் உள்நோக்கம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

#image_title

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது, தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது உள்நோக்கம் கொண்டதாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

#image_title

ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல் என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.

#image_title

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ரவி உறுதியாக நம்பியிருந்தால், கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிய உடனேயே திருப்பி அனுப்பியிருந்திருக்கலாம். அவ்வாறு அனுப்பியிருந்தால் உடனடியாக தமிழக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அப்படி இரண்டாவது முறையாக சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது ஏன்? அப்படியானால், அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.

#image_title

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுநர் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வினா எழுப்புவது ஏன்? என பல காரணங்களை குறிப்பிட்டுள்ளார் அன்புமணி.

உலகம்9 mins ago

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

சினிமா14 mins ago

பிரியங்கா சோப்ராவுக்கே இப்படியொரு கொடுமை நடந்திருக்கா? பரபரக்கும் பாலிவுட்!

சினிமா27 mins ago

அய்யோ! யார பார்க்குறதுன்னே தெரியலையே.. ஜிம் உடையில் கிக்கேற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா மேனன்!

சினிமா38 mins ago

லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சினிமா50 mins ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா9 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா10 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா10 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்10 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+