சினிமா
42 வயது நடிகையையும் விடாத தயாரிப்பாளர்; ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்!
வங்க மொழிப் படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்வஸ்திகா முகர்ஜிக்கு இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் என்பவர் பாலியல் ரீதியான மிரட்டல் விடுத்ததாக நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வங்க மொழியில் 20 ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி சமீபத்தில் காலா எனும் இந்தி படத்தில் நடித்து பாலிவுட் நடிகையாக உருமாறினர்.
இந்நிலையில், அவர் நடிப்பில் சிபுர் எனும் இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது. அந்த படத்தை இணைந்து தயாரித்து வரும் சந்தீப் சர்கார் என்பவர் தொடர்ந்து நடிகையிடம் பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்திருப்பதாக நடிகை புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது புகைப்படங்களை நிர்வாண போட்டோக்களாக மார்பிங் செய்து ஆபாச வெப்சைட்டுகளில் விடப்போவதாக சந்தீப் சர்கார் இ மெயில் மூலம் ஏகப்பட்ட மிரட்டல்களை விடுத்துள்ளதாக அதன் ஆதாரங்களையும் காட்டி உள்ளார். சந்தீப் சர்கார் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு வரும்படி போலீஸார் தெரிவித்து இருப்பதாக தகவ்லகள் வெளியாகி உள்ளன.
நடிகையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் பார்ன் வெப்சைட்டுகளில் கசிந்த நிலையில் தான் தற்போது கடுப்பாகி அந்த இணை தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார் என்கின்றனர்.