தமிழ்நாடு
கலவரத்தை தூண்டும் அண்ணாமலை… பாய்ந்தது 4 பிரிவுகளில் வழக்கு!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் நிலவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#image_title
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான செய்திகளை பரப்பிய விவகாரத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மீதும். பீகாரில் பாஜக டிவிட்டர் பக்கத்தை கையாளும் பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் காரணம்.
திமுக ஆரம்பிக்கப்பட்டதி இருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது. இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியது, கலவரத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.