Connect with us

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் 14% பேர் மட்டுமே தேர்ச்சி: இவங்க தான் எதிர்கால சமூதாயத்தை உருவாக்குபவர்களா?

Published

on

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 14 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நிலையில் இந்த ஆசிரியர்கள் தான் எதிர்காலத்தில் வலுவுள்ள சமுதாயத்தை உருவாக்க போகிறார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தேர்வு தாள்-1ல் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ஐ ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதிய நிலையில் அதில் வெறும் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தகுதித்தேர்வு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்த நிலையில் அதனை மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வு தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 1,53,233 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் அதில் 21,543 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவு குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 86 சதவீத ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இவர்களால் எப்படி ஒரு ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?