சினிமா செய்திகள்
நாற்காலியை நான் இயக்கவில்லை – ஏ.ஆர். முருகதாஸ்!
சர்கார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில், ரஜினியை வைத்து நாற்காலி எனும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என அதிரடியாக ட்விட்டரில் ஏ.ஆர். முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.
ஆனால், தான் ரஜினியை வைத்து படம் இயக்குகிறேன் என்றோ இயக்கவில்லை என்றோ அவர் குறிப்பிடவில்லை. இதனால், ஏ.ஆர். முருகதாஸ் – ரஜினி படக் கூட்டணி இன்னமும் முடிவு ஆகாத நிலையில் உள்ளதாகவே இதிலிருந்து தெரிகிறது.
எது எப்படியோ நாற்காலி என்ற தலைப்பு இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.